அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

உண்மை இஸ்லாம்

இஸ்லாம் இரண்டு நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது :-

ஒன்று மறைவான அம்சத்தையும், இரண்டாவதாக வெளிப்படையான நிலையையும் உள்ளடக்கியது. அதாவது முதல் நிலையை பொருத்தளவில், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் மீது ஈமான், நேசம், நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையை குறிக்கின்றது. இரண்டாவது நிலை, முதல் நிலையை வெளிப்படையாக பிரதிபலிக்கக் கூடிய, இன்னும் குறிப்பாக இதில் எந்த அளவிற்கு நாம் மதிப்பு மற்றும் பற்றுதலுடன் இருக்கின்றோம் என்பதை நமது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அமல்களும், மேலும் புனித திருக்குர்ஆன் கூறும் சுன்னத்துகள், ஹராம் மற்றும் ஹலால் ஆகியவற்றை பேணுவதையும் குறிக்கிறது. இங்கு நாம் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் ஒரு போதும் மறைவானவற்றில் இருந்து வெளிப்படையான நிலையை பிரிக்க முடியாது. இன்னும் கூறவேண்டும் என்றால் இவ்விரண்டையும் சேர்த்துதான் முழுமையானதொரு இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது

இத்துடன் எனது இந்த ஜும்ஆ குத்பாவை நிறைவு செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடினால் இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் தொடர்வேன், மேலும் அல்லாஹ் உங்களுக்கு இந்த ஜும்ஆ சொற்பொழிவை புரிந்து கொள்ளும் ஆற்றலை வழங்குவானாக.இதன் மூலம் மனித குலம் மட்டுமல்லாமல், அழகிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்களும், உண்மை இஸ்லாத்தின் மாண்பு மற்றும் மனிதகுலத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் .. வெறும் நாவினால் பேசுவதற்கும் அதை நடைமுறை படுத்துவதற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது. ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்றால் நீங்கள் உண்மையான முஸ்லீம்கள் என்று கூறினால் அந்த அழகிய இஸ்லாத்தின் மதிப்பு உங்களிடமிருந்து பிரதிபலிக்க வேண்டும் . வெறும் உதட்டளவில் நான் முஸ்லீம் அல்லது இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுவதற்கு சில நொடிகள் போதும். ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் அந்த மேலான சிறப்புள்ளது. அந்த ஏக இறைவன் உங்கள் மீது மேலான அருளை பொழிந்து இந்த நூற்றாண்டின் தூது செய்தியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளான். மேலும் உங்களை இந்த நூற்றாண்டில் அந்த அழகிய இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஆற்றலையும் ஒரு பேரருளாக வழங்கியுள்ளான். எனவே இப்போது உங்களின் கடமை நீங்கள் உங்களுடன் போராடி, உங்களுக்குள் இறைவன் நாடும் அந்த அழகிய இஸ்லாத்தை மிளிர செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு உண்மையான முஸ்லீம் சகோதர, சகோதரிகளாக ஒரே அணியாக நின்று, இந்த அழகிய உண்மை இஸ்லாத்தை உலகத்தின் எல்லை வரை எட்ட வைத்து, இந்த மகிமை மிக்க இஸ்லாத்தை வெற்றியின் பக்கம் முன்னேற செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.

-ஜுமுஆ பேரூரை 21.01.2022-ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்

மாற்று மத சகோதரர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையை போல் மாபெரும் ஆன்மீக அருளான முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு :--

ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் :

இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப் பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக சிரியா தோன்றும். இதுவே வாக்களிக்கப்பட்ட மகன் தோன்றும் காலம் ஆகும்.

இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட அவர் வருகையுடன் தொடர்பு படுத்தியுள்ளான். இதற்கு பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நீங்கள் வாக்களிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).

இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள் இரண்டாவது கலீபதுல் மஸிஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள். ஆனால், ஒருசில இறை அறிவிப்புக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹமத் (ரழி) (1889-1965) அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது (அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக

1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற் பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: -

நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை. நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும் எனக்கு பிறகு கியாமத் நாள் வரை எவருமே தோன்ற மாட்டார் என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) முன்னறிவிப்பின்படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)

நிச்சயமாக உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக் கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன்: 41:53)

பொதுவாக ஒரு சில அஹ்மதி நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்:
அதாவது 'இறைபுறத்திலிருந்து நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதி கலிஃபாக்கள் கூறியுள்ளார்களா? என்று

இதற்கான நமது பதில் ஆம்!கூறியுள்ளார்கள் என்பதாகும்.

ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக, அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது(அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள். மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள்.

இது சம்பந்தமாக இறைவனால் இந்நூற்றாண்டின் மஸீஹாஹ அனுப்பப்பட்ட ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) கூறுகின்றார்கள்:-

நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லீஹ் மவ்வூதே என்று 20 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்தி கண்ணியப்படுத்தினான். அதாவது, முதலில் என்னை கமரன் முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல் முஃமினீன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும் உயர்த்தினான். இம் மதிப்பை நான் எவரிடமும் சண்டையிட்டு பெறவில்லை மாறாக, அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். மேலும், இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான், அதாவது அவனது தூது செய்தியைக் கூறுவதற்காகவும் உலக மக்கள் அனைவரையும் சிலைகளை விட்டு விட்டு ஓரிறை கொள்கைக்கு திரும்புவதற்காக இதை அவன் எனக்கு அளித்தான். கடந்த 12 ஆண்டுகளில் இறைவன் என்னை பஷீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபஷ்ஷிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.

எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே! உங்கள் உள்ளங்களை மாற்றும் சக்தி எனக்கில்லை, அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும் நான் மிக பெரிய அறிவாளி இல்லை. மாறாக நான் நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் ஸூரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட அவரது இரண்டாவது வருகையாவேன். நான் அசாதாரணமான கல்வியோ அல்லது பெரிய பட்டமோ பெற வில்லை. ஆனால், அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை நபியாக தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.

எனக்கு எந்த மனிதனை பார்த்தும் அச்சமில்லை. என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்.

- ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள்